இறப்பதற்கு முன்னாள் மனைவியுடன் தன்னுடைய கடைசி ஆசையை கூறியுள்ளார் ஆனந்த கண்ணன்.
Aanandha Kannan in Last Request to Wife : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வந்தவர் ஆனந்த கண்ணன். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் அதன் பின்னர் சிந்துபாத், விக்ரமாதித்தன் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
அது மட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதமாக அவதியுற்று வந்த ஆனந்த கண்ணன் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது ஆனந்த கண்ணனின் தோழி ஒருவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் இறப்பதற்கு முன்னர் தனது மனைவியுடன் கூறிய கடைசி ஆசை குறித்து பதிவு செய்துள்ளார்.
Thalapathy 66 : விஜய்யின் சம்பளம் மற்றும் படத்தின் Budjet – Shock-ல் ரசிகர்கள்..!
நான் இறந்த பிறகு என்னுடைய சாவு கல்யாணம் சாவு மாதிரி இருக்க வேண்டும். அனைவரின் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். மேளதாளத்துடன் என்னை வழியனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். ஆனந்த கண்ணனின் ஆசையை அவரது மனைவியை நிறைவேற்றியதாக அந்த தோழி தெரிவித்துள்ளார்.