தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் வெளியாக சிக்கல்கள் எழுந்திருந்தது.

தற்போது இந்த சிக்கல் தீர்வதற்குள் அடுத்த புது பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது, வாரிசு படத்தில் அனுமதி பெறாமல் ஐந்து யானைகளை பயன்படுத்தியது தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.