அதிக திரையரங்குகளை கைப்பற்றி இருக்கும் துணிவு திரைப்படத்தால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இதில் தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேருக்கு நேராக மோதிக்கொள்ள உள்ளன. இதனால் இப்படங்களின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமாக எகிறி வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தகவல் விஜய் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இது குறித்த தெளிவான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.