தமிழன் தமிழன் என பேசிட்டு இப்போ வெட்கமே இல்லையா என விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
800 Movie Controversy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 800. இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை படமாக இது உருவாக உள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
தமிழன் தமிழன் என மேடைக்கு 300 முறை பேசிவிட்டு இப்போ இப்படி செய்வது சரியா என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
முரளிதரன் இலங்கையை சேர்ந்தவர், ஈழத் தமிழர்கள் கொன்று குவித்த பிறகு அமைதியை நிலைநாட்டியது ராஜபக்சே என அவருக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து இருந்தார் இந்த இரண்டு கிராமங்களும் இலங்கை மக்கள் வசிக்கும் கிராமங்களாக தான் இருந்தது. அதில் ஈழத்து தமிழர்கள் யாரும் வசிக்கவில்லை.
அப்படி இலங்கையை சேர்ந்த ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இனி விஜய் சேதுபதி நடித்த படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என கூறி வருகின்றனர். இதனால் விஜய் சேதுபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கும் சிக்கல் எழுந்துள்ளது.