Pro Volleyball League Starts – இந்தியாவில் முதல் முதலாக புரோ கைப்பந்து லீக் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டி தொடரில் 7 அணிகள் விளையாட உள்ளது.
முதல் புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடைப்பெற்று வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் போன்ற 6 அணிகள் கலந்து கொண்டது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதி கொள்ள வேண்டும். போட்டிகள் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு நடந்த முன்றாவது ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ்-ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் பலப் பரிட்சை செய்தது.
விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி 2 செட்களை வெற்றி கொண்டது.
இந்த நிலையில் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் சூடு பிடித்தது.
இறுதியில் ஐதராபாத் அணி 15-11, 13-15, 15-11, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் ஆமதாபாத்தை வெற்றி கொண்டது.
இந்த வெற்றி அந்த அணிக்கு முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 4-வது போட்டியில் ஜெரோம் வினித் தலைமையிலான கோழிக்கோடு ஹீரோஸ் அணி, திபேஷ் சின்ஹா தலைமையிலான யு மும்பா வாலி அணியை எதிர்கொள்கிறது.
கோழிக்கோடு அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியை வெற்றி பெற்று இருந்தது. மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் கொச்சி அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது.
இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.