நான்கு நாள் முடிவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் நானே வருவேன்.

செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தில் தனுஷ் பிரபு மற்றும் கதிர் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை பெரிய பலம் என்றால் இரண்டாம் பாதி பெரிய நெகட்டிவ் என சொல்லப்படுகிறது.

இதனால் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என தெரியவந்துள்ளது. நான்கு நாள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 20 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான இந்த படத்தின் வசூல் இவ்வளவு குறைவாக இருப்பது ரசிகர்களை சோகம் அடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.