3rd test match Ind Vs Aus – மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. தொடக்க வீரர்களாக மயாங்க் மற்றும் ஹனுமா களமிறங்கினர்.
இந்திய அணியின் மோசமான ஆட்டதை வெளிக்காட்டிய ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் இந்த போட்டியில் நீக்கப்பட்டு, ஹனுமா மற்றும் மயாங்க் இருவரும்சேர்க்கப்பட்டு உள்ளனர்.
நடந்து முடிந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மேசமாக தோல்வி அடைந்தது. அதற்கு முக்கிய காரணமாக தொடக்க ஆட்டகாரர்கள் சிறப்பாக செயல்படாததே முக்கிய காரணமாக இருந்தது.
இதனை தொடர்ந்து, ராகுல் மற்றும் விஜய்க்கு எதிராகவும், அவர்களை அணியில் இருந்து விலக்கி, வேறு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்படியும் பல தரபினர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
மேலும், ராகுல் மற்றும் முரளி விஜய் தொட்ரந்து மோசமாக பேட்டிங் செய்து வரவே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய 3-வது டெஸ்ட் போட்டியில் புதிய வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணியை ரசிகர்கள் பெரிதும் எதிபார்க்கின்றனர்.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. ஹனுமா மற்றும் மயாங்க் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கி உள்ளனர்.
ஹனுமா மற்றும் மயாங்க் இருவருக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியமானது, இருவரும் இந்த வாய்பை சரியாக பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ஹனுமா 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
எதிர்பார்ப்பை சற்று பூர்த்தி செய்த மயாங்க் 76 ரன் எடுத்து ஆட்டமிழக்க, களத்தில் பூஜாரா மற்றும் கோலி ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பூஜாரா 38 ரன்களுடனும், கோலி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.