30000 Crores Investment in Tamil Nadu State : கொரானா வைரஸால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் தமிழக அரசின் சரியான நடவடிக்கைகளால் அவற்றை கையாண்டு வருகிறது.
அதேசமயம் தமிழகத்தின் எதிர்காலத்திலும் அதீத கவனம் செலுத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் ரூபாய் 30,000 கோடி அளவில் தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே 8 ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகியிருந்த நிலையில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேலும் 16 நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமானது.
இந்த முதலீடுகளால் தமிழகத்தின் பொருளாதாரம் உயர்வது மட்டுமல்லாமல் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.