3 days the weather is dry
3 days the weather is dry

3 days the weather is dry– சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது, “மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் பெய்ட்டி புயல்.

தொடர்ந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இதனால் மீனவர்கள் இன்று வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது” இவ்வாறு கூறினார்.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்த வரை அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆகையால் தமிழகத்தில், மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வங்கக்கடலில் 3 நாட்கள் கழித்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சூரைகாற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறிய வானிலை மையம்.

தற்போது வறண்ட வானிலை காணப்படும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.