இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆக போவது யார் என்பதை பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே போட்டியாளர் ஒருவர் உளறியுள்ளார்.
2nd Week Eviction Person : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த 16 பேரில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டு விட்டார் பாத்திமா பாபு.
அவரை தொடர்ந்து இந்த வார வெளியேற்ற படலத்திற்கான நாமினேஷனில் வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா என மொத்தம் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய ஆளாக நினைப்பது வனிதாவை தான். ஆனால் வனிதா இல்லாவிட்டால் பிக் பாஸ் வீடு சைலெண்டாகி விடும் என்பதும் எப்படியும் அவரை காப்பாற்றி விடுவார்கள்.
படத்தின் ப்ரோமோஷனுக்காக அடுத்தவரை புருஷன் என கூறிய வனிதா – வெளியான ஷாக்கிங் தகவல்.!
நேற்று நடந்த பேய் டாஸ்கில் மோகன் வைத்யா கொல்லப்பட்ட போது சாண்டி அவரை ஏன் கொன்னீங்க? இன்னும் 4 நாளில் அவரே போய் இருப்பார் என கூறி இருந்தார்.
சாண்டி இதை உண்மையாக சொன்னாரோ பொய்யாக சொன்னாரோ ஆனால் இது தான் உண்மை. இந்த வாரம் மோகன் வைத்யா தான் வெளியேறுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கமல்ஹாசன் சொல்ற மாதிரி முடிவு என்ன நம்ம கிட்டயா இருக்கு? எல்லாம் பிக் பாஸின் செயல்