ஜனவரி முதல் மீண்டும் 2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
2G Case Hearing From January : எப்போதும் இல்லாதது போல கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய 2ஜி ஊழல் வழக்கு குறித்த செய்திகளை அவ்வப்போது தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் காண முடிகிறது. காரணம், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நீலகிரி தொகுதியின் தி.மு.க எம்.பியுமான ஆர். ராசா தான்.
டில்லி, பாட்டியாலா நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து டில்லி உயர் நீதி மன்றத்தில் சி.பி.ஐ மேல் முறையீடு செய்துள்ள மனு ஜனவரி மாதம் முதல் விசாரணைக்கு வருவது தான் ராஜாவின் இந்த படபடபிற்கு காரணம்.
இதன் காரணமாகவே ஆ ராசா செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் உட்பட அதிமுகவை சார்ந்தவர்களை மோசமாக விமர்சனம் செய்து வருகிறார் என கூறப்படுகிறது.
சம்பந்தமே இல்லாமல், முதலமைச்சரை வாதத்திற்கு இழுப்பது முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவை இழிவாக பேசுவது என தொடர்ச்சியாக முகம் சுழிக்கும் செயல்களை ஆர். ராசா செய்து வருகிறார் என பலரும் பேசி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, தி.மு.க தலைவர் ஸ்டாலினை மிஞ்சும் அளவிற்கான செயல்களை ஆர். ராசா செய்து வருகிறார். தி.மு.கவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் ஸ்டலினா! இல்லை ராசாவா! என்ற அளவிற்கு ஆர். ராசா ஓவராக செய்கிறாரோ என்று தி.மு.கவினரே அதிர்ந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தனை ஆண்டுகள் தலைப்புகளில் இல்லாத 2ஜி ஊழல் வழக்கு ஆ. ராசாவின் செயலால் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் மீண்டும் தலை தூக்குகிறது.
இந்த தேர்தலிலும் 2ஜி ஊழல் வழக்கு தி.மு.கவிற்கு பின்னடைவாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.