Kerala SabariMalai : தொடர் போராட்டத்தின் காரணமாக , கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்த்திகை மாதம் மண்டல பூஜைக்காக இன்று மாலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட உள்ளது.
எனவே, நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பேசி, அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த முடிவை எதிர்த்து, பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், போராட்டத்தினால் அங்கு பதற்றம் நிலவி வருவதனால், சபரிமலையில் பம்பை, நிலக்கல் , சன்னிதானம் உள்ளிட்ட கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பிற்கு போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.