illegal

மாமியார் மற்றும் மகளை திருமணம் செய்த வாலிபர் தற்போது மனைவியின் கள்ளக்காதலால் பெரும் சிக்கலை சந்தித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் ப்ரீத்தி என்கிற பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், அப்போது ப்ரீத்திக்கு வயது 15 மட்டுமே என்பதால் திருமணத்தை பதிவு செய்யும் போது ப்ரீத்தியின் பெயருக்கு பதிலாக அவரின் தயார் தனது பெயரை பதிவிட்டுள்ளார். எனவே, ரமேஷுக்கும், அவருக்கும் திருமனம் நடந்ததாகவே ஆவணத்தில் இருக்கிறது. ரமேஷ் – ப்ரீத்தி தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறது.

இந்நிலையில், வேலை விஷயமாக ரமேஷ் துபாய் சென்றுவிட்டார். அப்போது, ப்ரீத்திக்கு, அகில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. துபாயிலிருந்து திரும்பி வந்த ரமேஷுக்கு மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவர அகில் மீது அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், காவல் நிலையத்தில் அகிலுக்கு ஆதரவாக பேசிய ரமேஷின் மனைவி ப்ரீத்தி, தான் ரமேஷ் என்பவரை திருமணம் செய்யவே இல்லை. ரமேஷ் தனது தாயாரைத்தான் திருமணம் செய்தார் என ஆவணங்களுடன் போலீசாரிடம் கூறியுள்ளார். இதைக்கேடு அதிர்ச்சி அடைந்த போலீசார் இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என திணறி வருகின்றனர்.