MK Stalin Tweet About Tasmac : தமிழகத்தில் தற்போது கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக அரசு அதைத் தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் சூழ்நிலைக்கு ஏற்ப தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுப் பிரியர்கள் மதுவிற்காக மற்ற மாவட்டங்களுக்கு படையெடுத்து வருவதாக கள்ளச் சாராய உற்பத்தி தொடங்காமல் இருக்கவும் தமிழகத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு.
யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது! என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் திமுகவினர் தான் மது ஆலைகளை நடத்துபவர்கள் மது ஆலைகளை நடத்துவதும் நீங்கள் தான் மதுவை ஒழிக்க நாடக அரசியல் செய்வதும் நீங்கள்தான்
மேலும் தலைவரே உங்களது நிறுவனத்திலிருந்து மதுவகைகளை அரசுக்கு கொடுக்காமல் நிறுந்துங்கள். தமிழக மக்களின் மீது அவ்வளவு அக்கறை உள்ளவராக இருந்தால் திமுகவினர் நடத்தும் மது ஆலைகளில் மது உற்பத்தியை உடனே நிறுத்த செல்லுங்கள். மது ஆலைகளை இழுத்து மூடுங்கள் என ஒரே ஒரு அறிக்கையை மட்டும் வெளியிடுங்கள் பார்க்கலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.