Vanitha Ready to Help Surya Devi : நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா, அண்மையில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டார். இவருக்கு எதிராக லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் என பலரையும் ஒத்தைக்கு ஒத்தையாக சமாளித்தார் வனிதா.
இவர்களது குழாயடி சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போனது. சூரியனுக்கு எதிராக வனிதா காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால், சூரிய தேவியை கைது செய்தது காவல்துறை.
அதன்பின் சூர்யா தேவிக்கும் அவரை விசாரணை செய்த பெண் காவலரும் கொரோனா உறுதியான நிலையில் அவர் வீட்டில் தனிமை படுத்தாமல் தலைமறைவானார்.
சும்மா பளிச்சுனு ஸ்லிம்மா மாறிய சீரியல் நடிகை வந்தனா – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.!
இது எல்லாம், பழைய கதை என்றாலும், சமீபத்தில் நடிகை வனிதாவிடம் ட்விட்டரில் ஒருவர் சூர்யாவுக்கு ஆதரவு கோரிக்கை ஒன்றை வைத்தார்.
அதில் ” சூர்யா தேவி இந்தப் பிரச்சினையில் அன்பு மட்டுமே, அவரது விமர்சனத்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்போது அவர் நிலைமை சரியாக இல்லை அவர் மீதான F.I.R அவரை விளிம்புக்குத் தள்ளிவிட்டது. அவருக்கு இப்போது சிகிச்சை தேவை” என்று கோரிக்கை வைத்தார்.
இந்த சூழலில்தான் வனிதா ஒரு ஷாக் ஆன செய்தியை வெளியிட்டுள்ளார், ” சூரியா தேவியின் மீது கொடுத்த புகாரை நான் வாபஸ் வாங்க அதிகாரியிடம் பேசிவிட்டேன்.
நான் சூர்யா தேவிக்கு உதவி செய்ய முதலில் அவர் கண்டுபிடிக்கப்பட வேண்டும், அவர் பாதுகாக்கப்பட வேண்டும். அதோடு விளையாடிக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் ஒன்றும் சாதாரண வைரஸ் அல்ல.
அவருக்கு எதிரான நடவடிக்கை நான் நிச்சயமாக தூண்டமாட்டேன். நானும் மனுஷன் தான்” என்று கூறி அண்டர் பல்டி அடித்தவிட்டார் நடிகை வனிதா. எப்படியோ இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்தால் சரிதான்.