தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சினிமாவிலிருந்து உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் தன்னுடைய தந்தை SAC அவர்களின் உதவியால் தான் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் தன்னுடைய திறமையை விடாமுயற்சியும் வைத்து இன்று உச்சத்தை தொட்டுள்ளார். இருப்பினும் அவரது அப்பா சந்திரசேகர் ஒரு பாதுகாப்பு வளையமாகவே அவரைச் சுற்றி வந்தார்.
இப்படியான நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய்க்கு தெரியாமல் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எனக்கும் அந்த கட்சிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என தெரிவித்தார்.
அதன் பின்னர் விஜய்க்கும் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக அவர்கள் பேசி பல வருடங்களாகி விட்டது என ஷோபா சந்திரசேகர் அளித்த பேட்டியில் கூறினார்.
தன்னை வளர்த்துவிட்ட தந்தைக்கு எதிராக விஜய் அறிக்கை வெளியிட்டது வைத்து அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #SACexposesVijayMafia மற்றும் #நன்றிகெட்டவிஜய் என்ற டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.