தர்ஷன் மனுஷனே இல்லை என மறைமுகமாக சாடியுள்ளார் மதுமிதா.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் காமெடி நடிகையான மதுமிதா.
இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் தன்னை இழிவாக நடத்தியாக கூறி கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாசில் இருந்து வெளியேறிய மதுமிதா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இதுவரை கவின், சாண்டி, தர்ஷன் என யாரும் எனக்கு போன் செய்து பேசவில்லை என கூறியுள்ளார்.
மேலும் நான் வீட்டிற்கு வந்ததும் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி எனக்கு போன் செய்து பேசினார், தர்ஷன் கூட உங்களுக்கு முதலுதவி செய்யவில்லை என கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது.
அவர் வெளியே வந்ததும் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அப்படியில்லை என்றால் அவர் மனிதனே இல்லை என கூறியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் தர்ஷன் இதுவரை என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என கூறி அவர் மனிஷனே இல்லை என மறைமுகமாக சாடியுள்ளார் மதுமிதா.