1 day ago Samayam Tamil chennai iit student death
1 day ago Samayam Tamil chennai iit student death

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் பெற்றோர் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை சந்திக்க உள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி விடுதியில், கடந்த 8-ஆம் தேதி இரவு சென்னை ஐஐடியில் எம்ஏ சமூகவியலாளர் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் தனது மரணத்துக்கு காரணம் என செல்போனில் குறிப்பு எழுதிவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் மாணவி பாத்திமா லத்தீப்பின் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகள் பாத்திமா தற்கொலை செய்து கொண்டதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து நேர்மையான மற்றும் சுதந்திரமான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-ஐ, மாணவி பாத்திமா லத்தீப் பெற்றோர் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.