கைதி திரைப்படம் நல்ல லாபம் கொடுத்த திரைப்படம் ஆனால் பிகிலில் அப்படி நடக்கவில்லை என விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்த வருட தீபாவளிக்கு பிகில், கைதி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின.
பிகில் திரைப்படத்தை அட்லீ இயக்க தளபதி விஜய் நடித்திருந்தார். அதே போல் கைதி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க கார்த்தி நடித்திருந்தார்.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி ஒன்றில் இந்த படங்களின் லாபங்களை குறித்து பேசியுள்ளார்.
கைதி சிறிய பட்ஜெட் திரைப்படம், தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு லாபத்தை கொடுத்தது. ஆனால் பிகில் பெரிய படம்.. லாபம் கொடுத்தாலும் பெரிய லாபம் இல்லை. விநியோகிஸ்தர்கள் கையை கடிக்காமல் போட்ட பணத்தை எடுத்து விட்டார்கள்.
ஆனால் போட்ட பணத்தை எடுக்க எதற்கு இந்த தொழில் செய்ய வேண்டும்? விஜய் போன்ற பெரிய நடிகர்கள் தனக்கு பில்டப் இருக்கும் படங்களை தேர்ந்தெடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுவே பிகில் கதையம்சம் உள்ள படமாக அமைந்திருந்தால் அனைத்து தரப்பினருக்கும் நல்ல லாபம் கொடுத்த படமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்/