சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் தேர்வு சரியான தேர்வு இல்லை என கூறி விஜய் டிவியை விளாசி எடுத்துள்ளார் பிரபல நடிகையான ஸ்ரீ பிரியா.
தமிழ் சினிமாவில் முன்னனணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ப்ரியா. ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
மேலும் இவர் பிக் பாஸ் ஒளிபரப்பான போது அது குறித்து கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் தேர்வு குறித்து விஜய் டிவியை விளாசியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் டைட்டிலை மூக்குத்தி முருகன் வென்ற நிலையில் ஸ்ரீ பிரியா தன்னுடையா ட்விட்டர் பக்கத்தில் எப்போது தான் நியாயமா நடந்துபீங்க? என விஜய் டிவியை விளாசி எடுத்துள்ளார்.
மேலும் புண்யா அல்லது விக்ரம் தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
#vijaytv I believe SS winner is never given to a contestant who is technically superior.Punya&Vikram are musically brilliant among the 5.bongu started from Satyaprakash not winning the tittle எப்பவாவது நியாயமா சங்கீத்த்தை மட்டும் கௌரவிக்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன்….
— sripriya (@sripriya) November 10, 2019