police

இரு சக்கர வானகத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் வந்ததற்காக தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்த போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிதம்பரத்தில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் ஒன்றாக இருசக்கர வானகத்தில் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 2 பேருக்கும் அதிகமாக ஒரு வாகனத்தில் வந்ததால் அபராதம் விதிப்பதாக கூறினர். இத்தனைக்கும் அந்த ஆண் ஹெல்மெட் போட்டியிருந்தார். ஆனாலும், அபராதம் விதிக்க முயல அந்த நபர் கோபத்தில் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன்பின், இரு சக்கர வாகனத்தின் ஆவணங்களை காட்டுமாறு கூறிய போலீசார் ஒரிஜினலை காட்டுங்கள். ஜெராக்ஸ் வேண்டாம் என அடாவடியாக நடந்து கொண்டனர். எங்களை மன்னிச்சுடுங்க சார். குழந்தைகளோடு வந்திருக்கிறோம். விட்டு விடுங்கள்.. இனிமேல் ஒரிஜினல் எடுத்து வருகிறோம் என அந்த நபரின் மனைவி எவ்வளவு கெஞ்சியும் போலீசார் மனம் இறங்கவில்லை.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பலரையும் கொந்தளிக்க செய்துள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் காவல்துறைக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.