public

பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தற்போது 10,11,12 ஆகிய தேர்வுகள் பொதுத்தேர்வுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை பள்ளி மாணவ, மாணவிகள் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் எழுதுகிறார்கள். அனைத்து கேள்விகளையும் எழுதுவதற்கு இந்த நேரம் போதவில்லை என மாணவர்களும், பெற்றோர்களும் பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதை தற்போது ஏற்றுள்ள தமிழக கல்வித்துறை 10,11,12 ஆகிய பொதுத்தேர்வுகளுக்கு 30 நிமிடங்களை அதிகரித்துள்ளது. இனிமேல், பொதுத்தேர்வுகளை இனிமேல் மாணவ, மாணவிகள் 3 மணி நேரம் எழுதலாம். இந்த அறிவிப்பு பள்ளி மாணவ, மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.