ஜெயம் ரவியின் மகனுக்கு இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகி இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் ஜெயம் ரவி.
இவரது மகன் ஆரவ் ரவி சக்தி சௌந்தராஜன் இயக்கிய டிக் டிக் டிக் என்ற படத்தில் அப்பா ரவியுடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்தில் ஆரவ்வின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இதனையடுத்து ஆரவ்விற்கு மிக பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், மணிரத்தினம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆரவ் நடிக்க உள்ளாராம்.
இந்த படத்தில் ஜெயம் ரவியும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.