உடலில் இருந்து தானாக இரத்தம் வடியும் நோயில் பாதிக்கபட்ட சிறுமி அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் குணமானர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாகராஜின் மகள் அர்ச்சனா, வயது 10. இவருக்கு இரண்டரை மாதங்களாக உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது போல் இரத்தம் வெளியேறும் நோயால் பாதிக்கபட்டார். இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றபோதும் எந்த மாற்றமும் இல்லை.
இதையறிந்த ஓசூர்ரை சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் கங்காதரன், அவருக்கு சிகிச்சை செய்ய முன்வந்தார். அவர் சிகிச்சை செய்த சில நிமிடங்களில், அர்ச்சனாவுக்கு இரத்தம் வெளியேறுவது நின்றுவிட்டது.
இதனையடுத்து, அக்குபங்சர் டாக்டர் கங்கதரணுக்கும், சிறுமி அர்ச்சனாவுக்கும் கலெக்டர் பிரபாகர் வாழ்த்து தெரிவித்தார்.