மீரா மிதுன், தான் தமிழ்நாட்டிற்கான லஞ்ச ஒழிப்புத்துறையின் முக்கிய பதவி ஒன்றிற்காக தேர்வாகி இருப்பதாக கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட அது குறித்து நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியவர் மீரா மிதுன்.
எப்போதும் சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்திற்கான லஞ்ச ஒழிப்பு துறையில் முக்கிய பதவியில் இடம் பெற்று இருப்பதாக புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் லோகோ லஞ்ச ஒழிப்பு துறையின் அதிகாரபூர்வ லோகோ இல்லை என கூறி வருகின்றனர்.
மேலும் இது அரசு சார்ந்த நிறுவனம் இல்லை, இதில் மீரா மிதுன் தன்னார்வலராக தான் சேர்ந்திருப்பதாகவும் சுட்டி காட்டி வருகின்றனர்.
I am now the Director for Chennai Tamilnadu State in Anti-corruption commission ( A.C.C ), no one can hide hereafter and i am watching. Ini odavum mudiyathu oliyavum mudiyathu @pinkvilla So join hands with me to bring a new age of corruption free State. @IndiaToday @THNewDelhi pic.twitter.com/pMKPvUJY2u
— Meera Mitun (@meera_mitun) November 14, 2019