The Congress party is demanding
The Congress party is demanding

சென்னை: ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சீமானை கண்டித்து, சென்னை கோடம்பாக்கம் அருகே இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்”.

இந்நிலையில் சீமானின் இந்த கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. மேலும் ராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, சீமான் மீது வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு கெடுதல் விளைவிக்கும் வகையிலும் பேசியதற்காக 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், இதுகுறித்து பதிலளித்த சீமான், ‘ என் மீது இது போன்ற லட்சக்கணக்கான வழக்குகள் இருக்கிறது. அதற்காக ராஜீவ் காந்தி குறித்து பேசியதை நான் திரும்ப பெறமாட்டேன்’ என பதில் அளித்தார்.

இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சீமானை கண்டித்து, சென்னை கோடம்பாக்கம் அருகே இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ராஜீவ்காந்தி கொலை பற்றி பேசிய சீமானுக்கு எதிராக சாலைமறியல் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.