VVPAT Paper Slips – சென்னை: வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு, VVPAT இயந்திரம் மூலம் வழங்கடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலின் போது, ஒப்புகைச்சீட்டு முறையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்கறிஞர் பாக்யராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் விதமாக, ஒப்புகைச்சீட்டு முறை 100 சதவீதம் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.,
மேலும் VVPAT இயந்திரம் மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் வாக்காளர்கள் அனைவருக்கும் ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.,