இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. எனவே, அதற்கு முந்தைய நாளான 26ம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
Saturday before deepavali declared holiday – இதைத்தொடர்ந்து வெளியூரில் படித்து வரும் மாணவர்களின் குடும்பம் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக தீபாவளிக்கு முதல் நாள் சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண் டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அவார்ட் வாங்க வேண்டிய படத்துக்கு தியேட்டர் இல்ல – மிக மிக அவரசம் படத்திற்கு வந்த சோதனை.!
இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை பள்ளிகல்வித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, 26ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தீபாவளிக்கு அடுத்த நாள் 28ம் தேதி திங்கள் கிழமை விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு முடிவு எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, திங்கள் கிழமை விடுமுறை அறிவித்தால் அதை ஈடுகட்டும் விதமாக எதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி செயல்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு பள்ளி மாணவ மற்றும் மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.