உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி இருந்தது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே மக்களிடத்தில் பிரபலமானார்கள்.

குறிப்பாக ஓவியா மக்களின் மனதை கொள்ளையடித்து சென்றார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஆரவ் மீது காதல் வயப்பட்டு பின்னர் ஆரவ் காதலை நிராகரித்தால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆரவ் ஓவியாவை பற்றி பேசியுள்ளார். அதாவது ஓவியா எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதால் அனைவருக்கும் அவரை பிடித்திருக்கிறது, எனக்கும் அதனால் தான் பிடிக்கும்.
ஆரவ் இவ்வாறு சொன்னது ஓவியாவிற்கும் ஓவியா ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.